அய்யா சாமி.. என்னால முடியாதுப்பா, பெரிய கும்பிடு போட்டு எஸ்கேப் ஆன சானியா மிர்சா, அப்படி என்னதான் ஆச்சு அவருக்கு.!

அய்யா சாமி.. என்னால முடியாதுப்பா, பெரிய கும்பிடு போட்டு எஸ்கேப் ஆன சானியா மிர்சா, அப்படி என்னதான் ஆச்சு அவருக்கு.!



saniya mirza escaped from social networks

ரசிகர்களின் கிண்டலிலிருந்து தப்பிக்க ,டென்னிஸ் வீராங்கனையும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கின் மனைவியுமான சானியா சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசியக் கிண்ண தொடரில் இன்றைய போட்டியில்  இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது எதிரெதிராக மோதுகிறது.

மேலும் இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டநிலையில் நெட்டிசன்கள் அவ்வப்போது சனியாவை விமர்சிக்கும் விதமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .

sania mirza

இந்நிலையில், இன்றைய போட்டியின் போதும் ரசிகர்கள்  சானியா மிர்சாவை விமர்சனம் செய்வார்கள் என அவர் ட்விட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சானியா மிர்சா நேற்று கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறுகையில்,

‘இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்க இன்னும் 24 மணிநேரமே இருக்கிறது. இந்த சூழலில் பல்வேறு சர்ச்சையான கருத்துகளில் இருந்து தப்பிக்க, நான் இப்போதே பாதுகாப்பாக ட்விட்டரில் இருந்து வெளியேறி விடுகிறேன்.

அடுத்த சில நாட்களுக்கு சமூக ஊடகங்கள் பக்கம் வர மாட்டேன். கிரிக்கெட் போட்டி தொடர்பாக பல்வேறு முட்டாள்தனமான கருத்துக்களை பலர் தெரிவிப்பார்கள். அதைத் தவிர்க்க வேண்டும்.

இந்தக் கருத்துகளால் சாதாரண நிலையில் இருப்பவர்களே உடல்நலம் குன்றிவிடுவார்கள். ஆனால், நானோ கர்ப்பமாக இருக்கிறேன். ஆதலால் விடைபெறுகிறேன். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வெறும் கிரிக்கெட் போட்டி விளையாட்டு தான். மறந்துவிடாதீர்கள்’ என தெரிவித்துள்ளார்.