ஆட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது திடீரென தாக்கிய மின்னல்! திடீரென மைதானத்தில் சுருண்டுவிழுந்த வீரர்கள்!

ஆட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது திடீரென தாக்கிய மின்னல்! திடீரென மைதானத்தில் சுருண்டுவிழுந்த வீரர்கள்!



Lightning struck during the match.

ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் கால்பந்தாட்டப் போட்டி ஒன்று நடந்தது. அப்போது ஜமைக்கா கல்லூரி அணிக்கும், வோல்மெர்ஸ் பாய்ஸ் அணிக்கும் இடையே கால்பந்தாட்ட போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் திடீரென மின்னல் தாக்கியது. அப்போது சக வீரர்களும் விளையாடிக்கொண்டிருக்கும்போது, மைதானத்தில் இருந்த இரண்டு வீரர்கள், தலையைப் பிடித்துக் கொண்டு ஒரே நேரத்தில் மைதானத்தில் மண்டியிட்டு கீழே விழுந்தனர்.

இதனைப்பார்த்த நடுவர் உடனடியாக விசில் ஊதி போட்டியை நிறுத்தினர். பின்னர் இரண்டு வீரர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட வீரர்களில் ஒருவருக்கு இடது பக்க உடல் பாகம் செயலிழந்தது. மேலும் அவர் பேச்சு வராமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாதிக்கப்பட்ட மற்றொரு வீரரும் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். ஏற்கனவே, கடந்த 1998ஆம் ஆண்டு அக்டோபரில் காங்கோவில் நடந்த கால்பந்தாட்ட மைதானத்தில், மின்னல் தாக்கியதில் வீரர்கள் பார்வையாளர்கள் உள்பட 11 பேர் பாதிக்கப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.