தோல்வியின் மிக அருகில் சென்னை அணி? கடுப்பில் ரசிகர்கள்! என்ன நடக்க போகுதோ!
தோல்வியின் மிக அருகில் சென்னை அணி? கடுப்பில் ரசிகர்கள்! என்ன நடக்க போகுதோ!
ஐபில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இன்று விளையாடிவருகிறது. ராஜஸ்தானின் சொந்த மண்ணில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி ராஜஸ்தான் அணியை பேட் செய்ய அழைத்து.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 151 ரன் மட்டுமே எடுத்தது. 152 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் வாட்சன், ரெய்னா, டுப்ளஸி, ஜாதவ் என அனைவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து சென்னை அணியை தோல்வியின் அருகில் சேர்த்துவிட்டனர்.
9 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 39 ரன் மட்டும் எடுத்துள்ளது. ராய்டு மற்றும் டோனி இருவரும் விளையாடி வருகின்றனர். 66 பந்துகளில் 113 ஓட்டம் தேவை என்ற கடினமான நிலையில் சென்னை அணி விளையாடி வருகிறது.
தோணி, ராய்டு இருவரும் கடைசி வரை நிதானமாக விளையாடினாள் மட்டுமே சென்னை அணி வெற்றிபெற வாய்ப்புள்ளது. இல்லையெனில் சென்னை அணி வெற்றிபெறுவது மிகவும் கடினம்.