உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி.! 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.! ஏமாற்றத்தில் ரசிகர்கள்.!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி.! 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து.! ஏமாற்றத்தில் ரசிகர்கள்.!



fourth-day-match-canceled-due-to-rain

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிவருகிறது. இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில், முதல் நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. 

2-வது நாளான நேற்று முன்தினம் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 217- ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. 

நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் இருவரும் நிதானமாக ஆடினர். 3-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.  கேப்டன் வில்லியம்சன் 12 ரன்களுடனும், ரேஸ் டெய்லர் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இந்தநிலையில், 4-ஆம் நாள் ஆட்டம் இன்று துவங்க இருந்த நிலையில், சவுத்தாம்ப்டனில் மழை பெய்ததால் 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.