அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
நாளுக்கு இத்தனை சிகிரெட்?.. மொத்த தாம்பத்திய வாழ்க்கைக்கும் சிக்கல்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
நாளுக்கு இத்தனை சிகிரெட்?.. மொத்த தாம்பத்திய வாழ்க்கைக்கும் சிக்கல்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
நாளொன்றுக்கு 10 சிகிரெட் பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதா? என சோதனை செய்துகொள்வது நல்லது, இவ்வாறு புகைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளவர்களின் தாம்பத்திய வாழ்க்கை சிக்கலாகும் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. மேலும், புகை பிடிப்போருக்கு தாம்பத்திய உறவில் ஈடுபடுக்கையில் செயலாற்றும் தன்மை ஏற்படும் என்பதும் அம்பலமாகியுள்ளது.
கடந்த 2 வருடமாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், நாளொன்றுக்கு 10 சிகிரெட் புகைப்பவர்களுக்கு தாம்பத்திய உறவில் ஏற்படும் பிரச்சனை குறித்து மேற்கொண்ட ஆய்வில், அதனால் விறைப்புத்தன்மையில் பிரச்சனை ஏற்படும் என்ற முடிவு தெரியவந்துள்ளது. புகை பிடிக்கும் போது உடலுக்குள் செல்லும் நிகோடின், திசுக்களை உறிஞ்சு பாதிப்பை ஏற்படுத்தி அதனை சுருங்க செய்கிறது. இதனால் சம்பந்தப்பட்டவர் தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கிறது.
புகைப்பழக்கத்தை போல மதுபானம் அருந்தும் நபர்களுக்கும் பாலியல் ரீதியான சிக்கல் ஏற்படுவதாக தெரியவருகிறது. 120 கோடி மக்கள் தொகையில் 20 கோடி பேர் ஆண்மைகுறைபாடு, தாம்பத்திய உறவுகளில் எடுபடாமல் இருக்கும் சூழல் போன்ற குறைபாட்டினால் பாதிக்கப்படுவதாகவும் தெரியவருகிறது.
பல பாலியல் சிக்கலுக்கும், முரண்பாடு கொண்ட தாம்பத்திய நடவடிக்கைக்கும் மூலகாரணமாக தாம்பத்திய அதிருப்தி உள்ளது. இந்த சிக்கல் தகவல் தொழில்நுட்பத்துறை போன்ற பணியிடத்தில் பணியாற்றி வரும் நபர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. மேற்கத்திய வாழ்க்கை முறை கலாச்சாரம், அதன் மீதான மோகம், வாழ்க்கை மற்றும் உணவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், பரபரப்பு, மன அழுத்தம் போன்றவையும் தாம்பத்திய உறவுகளில் விரிசலை ஏற்படுத்துகிறது.
மாறிவரும் இணையவழி கலாச்சாரம் காரணமாக மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனால் மன அழுத்தத்தையும் எதிர்கொள்ளும் சூழலில் மக்கள் இருக்கின்றனர். இதனால் தாம்பத்திய விஷயம் கடுமையான அளவு மாறுகிறது. பிற கலாச்சாரம் மீதான மோகம், நமது நடப்பு கலாச்சாரத்தில் உள்ள எண்ணத்தை மாற்றி, தரம் தாழ்ந்து செயல்பட மூலகாரணமாக அமைந்து, பாலியல் சீர்குலைவுக்கு உறுதுணையாக இருக்கிறியாது.
இதனைப்போல, துரித உணவு கலாச்சாரம், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுதல் போன்றவையும் தாம்பத்திய உறவை பாதிக்கிறது. திருமணம் முடிந்த தம்பதியில் 15 % நபர்கள் கருவளர்ச்சியின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர்.