ரயில் பயணத்தில் அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

ரயில் பயணத்தில் அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!


tamil-nadu-minister-suddenly-fell-ill-while-traveling-b

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ரயில் பயணத்தின் போது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், தமிழக அமைச்சர் மெய்யநாதன் சென்னை செல்வதற்காக புதுக்கோட்டை ரயில் நிலையத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார். சென்னை பயணத்தின் போது இடையில் ரத்த அழுத்தம் காரணமாக அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உலநலக்குறைவு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நள்ளிரவுசுமார்  2 மணியளவில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கிய அமைச்சர் மெய்யநாதன் சிதம்பரம்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் தற்போது அமைச்சர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.