#PerambalurDT : பெரம்பலூரில் ரயில் வரப்போகுது.! நீண்டநாள் கனவு விரைவில்.!

#PerambalurDT : பெரம்பலூரில் ரயில் வரப்போகுது.! நீண்டநாள் கனவு விரைவில்.!



pm-modi-may-come-to-perambalur

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் திமுக என மும்முனை போட்டி நிலவுகிறது. 

பாஜக மற்றும் அதிமுக இரண்டும் ஒரே கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தமுறை, பாஜக தலைமையிலான புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது. 

pm modi

இந்த கூட்டணியில் பாஜகவுக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளது. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே, சமக போன்ற பல்வேறு கட்சிகள் ஆதரவுடன் பாஜக தலைமை தாங்குகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் ஐஜேகே தலைவர் பாரிவேந்தன் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். 

pm modi

இந்த நிலையில், பாரிவேந்தனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, மக்களிடம் பேசியபோது, "பிரதமர் நரேந்திர மோடி பெரம்பலூருக்கு வர அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கின்றன. பாஜக கூட்டணியை நீங்கள் வெற்றி பெறச் செய்யும் பட்சத்தில் பெரம்பலூர் மக்களின் கனவு திட்டமான ரயில் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.