#Breaking: ஓ.பன்னீர் செல்வம் மகன் எம்.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

#Breaking: ஓ.பன்னீர் செல்வம் மகன் எம்.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!



  OPS Son Raveendranath Victory Cancelled by Chennai Court 

கடந்த 2018ல் நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது, அதிமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தாலும், தேனி மக்களவை தொகுதியை கைப்பற்றியது. 

அந்த தொகுதியில் அன்றைய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். அவரின் வெற்றி முறைகேடானது என தொகுதியின் வாக்காளர் மிலானி என்பவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்நிலையில், இன்று இவ்வழக்கு விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு வாசிக்கப்பட்ட நிலையில், தேனி மக்களவை தொகுதியின் வேட்பாளராக ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது" என நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.