BREAKING : திமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக! சுக்குநூறாக உடைந்த திமுக.... வெளியான பரபரப்பு அறிவிப்பு..!!!
தமிழக அரசியலில் மீண்டும் கூட்டணி மாற்றங்கள் வேகமெடுத்துள்ளன. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் தொடர்ந்து மாறி வரும் நிலையில், மதிமுக திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை அமைத்த நிலையில், பெரும்பான்மை இல்லாத சூழலில் திமுக கூட்டணியில் இருந்த பல கட்சிகள் புதிய அரசுக்கு ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில் தற்போது மதிமுகவும் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: BREAKING: அதிர்ச்சியில் விஜய்! தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கட்சி.....அதிகாரபூர்வ அறிவிப்பால் அரசியல் வட்டாரதில் பரபரப்பு!!!
தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, அதில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடையநல்லூர் தொகுதியில் ராஜேந்திரனும், சீர்காழி தொகுதியில் செந்தில் செல்வமும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர்.
அதிமுக கூட்டத்துக்குப் பிறகு வெளியான அறிவிப்பு
நேற்று நடைபெற்ற அதிமுக உயர்மட்ட பொதுக்குழு கூட்டத்தில் மதிமுகவைச் சேர்ந்த இரு எம்எல்ஏக்களும் பங்கேற்காதது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக இருந்தது. அதனைத் தொடர்ந்து வைகோ வெளியிட்ட அறிவிப்பில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக உறுதிப்படுத்தினார்.
எம்எல்ஏ ஒருவரின் முடிவு கவனம்
இதற்கிடையில், சீர்காழி தொகுதி எம்எல்ஏ செந்தில் செல்வம் ஏற்கனவே மதிமுகவில் இருந்து விலகியதாகவும், விரைவில் திமுகவில் இணைய இருப்பதாகவும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மதிமுகவின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் அதன் சட்டப்பேரவை நிலைப்பாடு குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: திடீர் திருப்பம்... NDA கூட்டணியிலிருந்து விலகினார் ஜான் பாண்டியன்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!