Election Campaign | "தமிழக மக்களின் அன்பு தான் பிரதமர் மோடியை அழைத்து வருகிறது" - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.!

Election Campaign | "தமிழக மக்களின் அன்பு தான் பிரதமர் மோடியை அழைத்து வருகிறது" - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.!



love-for-tamlnadu-people-bring-pm-modi-to-tamilnadu-cen

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. 18-வது பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதன் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்குகிறது. தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. தமிழகத்தில் பாஜகவின் ஆதிக்கத்தை கொண்டு வருவதற்காகவும் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு விகிதத்தை அதிகரிப்பதற்காகவும் அந்தக் கட்சியின் தலைமை தீவிரமாக பாடுபட்டு வருகிறது.

politicsபாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் அடிக்கடி தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மற்றும் பேரணியில் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர இருக்கிறார். தேர்தலை மனதில் வைத்துக் கொண்டுதான் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

politicsஇது தொடர்பாக பேசியிருக்கும் அவர் பிரதமர் மோடி தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு தமிழகத்திற்கு அடிக்கடி வரவில்லை. தமிழக மக்கள் மீது அவர் கொண்டுள்ள அன்பால்தான் தமிழகத்திற்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடியின் தமிழக சுற்றுப்பயணம் குறித்து தமிழக முதல்வரின் கருத்து வருத்தம் அடையச் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.