"விஜயின் அருவருப்பாக பேச்சு".. கரூர் சம்பவம் குறித்து ஜெயக்குமார் அதிரடி.!
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் கரூர் நிகழ்ச்சி தொடர்பாக கடுமையாக விமர்சித்தார்.
கரூரில் விஜய் பேசிய வார்த்தைகள் அருவருக்கத்தக்க வகையில் இருந்ததாகவும், அவரது கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும், கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது என்றும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தால், தனது சொந்த நிதியில் இருந்து ஆளுக்கு ரூ.1 கோடி வழங்கியிருக்கலாம் என்றும் ஜெயக்குமார் விமர்சித்தார்.
அரசுப் பணியை இவ்வாறு தாரை வார்ப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், "கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்தது போல" இந்த நடவடிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்....திருமாவளவன் திடீரென பின்வங்கினார்! முடிவை மாற்றியதால் அரசியலில் புதிய பரபரப்பு.!!!