தொண்டனாக வேலை செய்ய தயார் - செங்கோட்டையன் பேச்சு.!!



ex admk minister sengottaiyan speech in may 1

மே தின விழாவை முன்னிட்டு தொண்டர்கள் முன்னிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் உரையாற்றியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மே தின விழாவை முன்னிட்டு முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 48000 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்தபோது கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போதைய ஆட்சியில் மக்களின் எதிர்பார்ப்பு எதுவும் பூர்த்தி செய்யப்படவில்லை.
மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர். 

இதையும் படிங்க: செய்தியாளர்களை சந்தித்த விஜய்; என்ன சொன்னார் தெரியுமா?.!

தொண்டனாக வேலை செய்ய தயார்

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் தொண்டனாக நான் வேலை செய்ய விரும்புகிறேன்" என்று கூறினார்.