சாதித்து காட்டிய எடப்பாடி! அந்தர் பல்டி அடித்த 7 அதிமுக MLA-க்கள்..... அமைச்சரவை இடமில்லாததால் அடுத்தடுத்து பரபரப்பு..!!!
தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் கூட்டணி மற்றும் ஆதரவு மாற்றங்களுக்கு நடுவில், எஸ்பி வேலுமணி அணியில் இருந்த சில எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் இபிஎஸ் அணிக்குத் திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்காதது இந்த முடிவுக்குக் காரணமாக பார்க்கப்படுகிறது.
அரசியல் வட்டார தகவலின்படி, எஸ்பி வேலுமணி அணியில் இருந்த 7 எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கத் தயாராகி வருகிறார்கள். இதில் பாலக்கோடு தொகுதி எம்.எல்.ஏ கே.பி.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ மரகதம் வெறிவேல் உள்ளிட்டோர் முக்கியமானவர்களாகக் கூறப்படுகின்றனர்.
அமைச்சரவை இடமின்மை காரணமா?
புதிய அமைச்சரவை அமைப்பில் தங்களுக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த சிலர், இறுதி பட்டியலில் பெயர் இல்லாததால் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. இதனால், தங்கள் தொகுதி தொண்டர்கள் மத்தியில் எதிர்மறை கருத்து உருவாகக் கூடாது என்பதற்காகவே பழைய அணிக்குத் திரும்பும் முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அதிமுகவின் உள்கட்சிச் சமன்பாடுகள் மீண்டும் மாறும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே பல்வேறு அணிகளில் இருந்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தங்களது அரசியல் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் வட்டாரத்தில் புதிய கணக்கு
எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அதிமுகவின் உள்கட்டமைப்பில் மீண்டும் மாற்றம் ஏற்படும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். விஜய் அமைச்சரவை அறிவிக்கப்பட்ட பிறகு ஏற்பட்டுள்ள இந்த நகர்வு, தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: திடீர் திருப்பம்.... இனி தவெக கட்சிக்கு ஆதரவு இல்லை! அதிருப்தியால் மீண்டும் திரும்ப அலோசனை...!!!