என்ன மாறி ஓப்பனா திறந்த மேடையில் உங்களால் பேச முடியுமா? அந்த தில்லு இருக்கா? மேடையில் அந்த ஒரு வார்த்தை சொன்ன விஜய்... அதிர்ந்து போன எதிர்க்கட்சிகள்..!!!
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் பேசிய கருத்துகள் அரசியல் அரங்கில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளன. தவெக அரசை விமர்சித்து வரும் திமுகவினருக்கு நேரடியாக பதிலளித்த அவர், திறந்த மேடையில் விவாதிக்கத் தயாரா என சவால் விடுத்தார்.
திமுக விமர்சனங்களுக்கு நேரடி பதில்
வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஜய், தவெக அரசுக்கு எதிராக திமுகவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகக் கூறினார். அதே நேரத்தில், தமக்கு அதிகாரமோ பணமோ அல்ல, மக்களின் நம்பிக்கையே முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தேர்தலுக்கு பிறகு மனம் திறந்து ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ! இனிதான் ஆட்டமே இருக்கு.... திமுக கையில் எடுத்த புது ஆயுதம் இதுதான்!!!
திறந்த மேடையில் பேச தயாரா?
தொடர்ந்து பேசிய அவர், தம்மைப் போல பொதுமக்கள் முன்னிலையில் வெளிப்படையாக கருத்துகளை தெரிவிக்க திமுகவினர் தயாராக இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார். மேலும், தனது பேச்சின் போது ஆளுங்கட்சியை விமர்சிக்கும் வகையில் கடுமையான மற்றும் தரக்குறைவான வார்த்தையையும் பயன்படுத்தினார்.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
திமுகவை நோக்கி விஜய் முன்வைத்த இந்த சவாலும், அவர் பயன்படுத்திய கடுமையான மொழியும் அரசியல் வட்டாரத்தில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் வெளியாகி வரும் நிலையில், இதுகுறித்த அரசியல் விவாதங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன.
பணமா? ஜனமா? தில்லா சொல்றேன் கெத்தா சொல்றேன்.. என் ஜனம் தான் டா எனக்கு முக்கியம்.. ஆவேசமாக பேசிய முதலமைச்சர் விஜய்#Karur | #CMVijay | #Public | #PolimerNews pic.twitter.com/AbKCIkmox0
— Polimer News (@polimernews) July 10, 2026
இதையும் படிங்க: அப்படி ஒரு சிரிப்புக்கு பின்னாடி சொன்ன ஒரே வார்த்தை! முதல்வர் விஜயின் உரை குறித்து சௌமியா அன்புமணி சொன்னதை பாருங்க...!!!