"யாரைப்பார்த்தும் பயம் இல்லை, யாருக்காகவும் என்னை மாற்ற மாட்டேன்" - அண்ணாமலை காரசார பேட்டி.!

"யாரைப்பார்த்தும் பயம் இல்லை, யாருக்காகவும் என்னை மாற்ற மாட்டேன்" - அண்ணாமலை காரசார பேட்டி.!



bjp-annamalai-pressmeet


என் மன் என் மக்கள் நிகழ்ச்சியில் தீவிரமாக களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் அண்ணாமலை, கோவையில் வைத்து இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, அவர் பேசுகையில், "நான் பதவிக்காக அரசியலுக்கு வந்தவன் கிடையாது. மிகப்பெரிய பதவியை தூக்கி எறிந்து விட்டு வந்தவன். 

யாருக்காகவும் எப்போதும் என்னை மாற்றிக் கொள்ளமாட்டேன். யாரைப் பற்றியும் நான் தவறாக சொல்லவில்லை. எனது தனி உலகத்தில் நான் இருக்கிறேன். 

ஒரு நாளுக்கு மக்களுடன் 10 மணி நேரம் இருக்கிறேன். நான் முழுநேர அரசியல்வாதி இல்லை. எனக்கும் என்றைக்கும் எனது முதல் பணி விவசாயமே. 

மரத்தை கல்லெடுத்து அடிப்பது போல் 2 வருடங்களாக அடித்து வருகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவை புகழ்ந்து வருகிறது. அதிமுக தனியாக கூட்டணி அமைத்தால் எங்களுக்கு எந்தவித பின்னடைவும் இல்லை. 

கூட்டணி குறித்து சம்பந்தப்பட்ட நேரத்தில் தலைவர்கள் பேசுவார்கள்" என கூறினார்.