#Breaking: வேங்கைவயல் விவகாரம்.. அண்ணாமலை சந்தேகம்.. தமிழகத்தை உலுக்கிய வழக்கில் திடுக் திருப்பம்?



  BJP Annamalai On Vengaivayal Issue 25 January 2025 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் வசித்து வரும் பகுதியில் நீர்த்தேக்க தொட்டி இருக்கிறது. இந்த தொட்டியில் கடந்த 26 டிசம்பர் 2022 அன்று மலம் கலக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பான புகார் எழுந்து விசிக கட்சி, இயக்குனர் பா. ரஞ்சித் உட்பட பல தரப்பு, ஆதிக்க ஜாதிவெறி எண்ணம் கொண்டவர்கள், குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக கூறினர். போராட்டமும் நடத்தினர். 

பட்டியலின இளைஞர்கள் 3 பேர் கைது

இதனிடையே, இந்த விஷயம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடந்த நிலையில், சமீபத்தில் புதுக்கோட்டை எஸ்.சி., எஸ்.டி வழக்கு வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில், சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்தது. அதன்படி, குற்றவாளிகளாக அதே கிராமத்தை சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் உள்ளூரை சேர்ந்த கவுன்சிலரின் கணவரை பழிவாங்க, ஜாதி சண்டையை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான இழி செயலை கையில் எடுத்தது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் பட்டியலின இளைஞர்களான ஆயுதப்படை காவலர் முரளி ராஜா, இளைஞர்கள் முத்துகிருஷ்ணன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதையும் படிங்க: கனிமவளக்கொல்லையை எதிர்த்த அதிமுக நிர்வாகி கொலை.. இறுதியாக கொடுத்த பேட்டி.. என்ன சொன்னார் தெரியுமா?

Vengaivayal Truth

சிபிஐ விசாரணைக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

இந்நிலையில், பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, இந்த விவகாரம் நடந்து 750 நாட்கள் கடந்தும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழக்கை சிபிசிஐடி அவசரமாக முடிக்க பட்டியலின இளைஞர்கள் 3 பேர் மீது குற்றச்சாட்டு முன்வைத்து இருக்கிறது. இந்த விசயத்தில் சந்தேகம் நீடிக்கிறது. இதனால் நீதிமன்றம் வேங்கைவயல் விவகாரத்தில் தலையிட்டு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், சிபிஐ விசாரணை செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கவுன்சிலர் கூட ஆக முடியாது - பாஜக அண்ணாமலையை கலாய்த்த அமைச்சர் சேகர்பாபு.!