அழியப்போகும் அதிமுக கட்சி...? எடப்பாடியை ஓரங்கட்டும் மாஜிக்கள்! சிவி சண்முகம் செய்யும் தில்லாங்கடி வேலையால்.... தலையை ஆட்டும் அமைச்சர்கள்!



aiadmk-internal-conflict-eps-cv-shanmugam-vijay-support

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்த அக்கட்சியில் தற்போது தலைமை மாற்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில், உட்கட்சி மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது.

தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான அணியினர் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அதிமுகவின் அடுத்தகட்ட தலைமை குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜய் போட்ட பிளான் மொத்தமும் நடக்குது.....விஜய்க்கு விஜயபாஸ்கர் திடீர் ஆதரவு! அதிமுக வில் அடுத்தடுத்து 10 க்கு மேல்.....அதிர்ச்சியில் அல்லேலப்படும் எடப்பாடி!!!

எம்.ஆர்.சி நகரில் ரகசிய ஆலோசனை

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சி.வி.சண்முகத்தின் இல்லத்தில் கடந்த சில நாட்களாக முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனையின் முக்கிய அம்சமாக, அதிமுகவைச் சேர்ந்த சுமார் 34 எம்எல்ஏக்கள் ஒருங்கிணைந்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கட்சித்தாவல் தடைச் சட்ட சிக்கல்களை தவிர்க்க, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த நகர்வு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இபிஎஸ் சமரச முயற்சி தோல்வியா?

அதிருப்தி அணியினரை சமாதானப்படுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக கூறப்பட்டாலும், அவை எந்த முடிவையும் எட்டவில்லை எனத் தெரிகிறது. “தேர்தலில் சரியான கூட்டணி அமைக்காததே தோல்விக்குக் காரணம்” என்று சி.வி.சண்முகம் தரப்பு நேரடியாக குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், எடப்பாடி பழனிசாமியை தலைமைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, எஸ்.பி.வேலுமணியை சட்டப்பேரவைக் குழுத் தலைவராக முன்னிறுத்தும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதிமுக எதிர்காலம் குறித்து கேள்வி

ஆதரவுக் கடிதங்களுடன் விஜய்யைச் சந்திக்க சி.வி.சண்முகம் தயாராகி வருவதாக பரவும் தகவல்கள், அதிமுகவுக்குள் புதிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் மாவட்டச் செயலாளர்களின் ஆதரவுடன் கட்சியை தக்கவைக்க இபிஎஸ் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், மறுபுறம் முக்கிய முன்னாள் அமைச்சர்கள் தவெக பக்கம் நகர்வது கட்சியின் எதிர்காலம் குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்த உட்கட்சி மோதல் அடுத்த சில நாட்களில் எந்த திசைக்கு செல்கிறது என்பது தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 

இதையும் படிங்க: சி.வி.சண்முகத்தின் தில்லுமுள்ளு வேலை.... எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி! அவசர மீட்டிங்.... அதிர்ச்சியில் அதிமுக!!!