புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது தெரியுமா... காரணம் அறிந்து கொள்வோம்....

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது தெரியுமா... காரணம் அறிந்து கொள்வோம்....



Why not eat non veg in puratasi month

நாம் முன்னோர்கள் தொட்டு இன்று வரை புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்று கூறக் கேட்டிருப்போம் அதன் காரணத்தை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக் கூடாது என்பதற்கு அறிவியலோடு, ஆன்மிக காரணமும் உள்ளது என்று சொல்லப்படுகிறது.

அறிவியல் காரணம்:
பொதுவாகவே புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். இது வெயில் கால வெப்பத்தைக் காட்டிலும் மோசமானது கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தைக் குறைக்கும். 

puratasi

தேவையில்லாது வயிறு தொடர்பான பிரச்னையை ஏற்படுத்தும். அது மட்டுமன்றி சரிவரப் பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்க்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி போன்ற தொந்தரவுகள் அதிகரிக்கும். 

ஆன்மீக காரணம்:
ஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம்.புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது என்பர். எனவே, அந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து விரதமிருப்பது நல்லது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.