டைவர்ஸ் வாங்கின கையோடு.. வீட்டை விட்டு வெளியேறிய நிலா.! அய்யனார் துணை குடும்பம் அதிர்ச்சி.!
வேலைக்கு போவதை வெறுக்கும் இளைய தலைமுறை.. என்ன காரணம் தெரியுமா.?!
இன்றைய காலங்களில் இளைஞர்கள் பலர் சம்பளத்துக்கு வேலை செய்வதை தவிர்த்து சொந்தமாக தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன.
ஒரு சிறிய அறையில் அமர்ந்து கொண்டு உலக அளவில் இணையத்தின் மூலமாகவும் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் வணிகம் செய்ய முடியும் என்பது பெரிய ஊக்கமாக இருக்கிறது. காரணம், ஆன்லைன் வணிகம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் பெரிய அளவில் முதலீடு தேவையில்லை.
எவ்வாறு தொழில் தொடங்குவது என்பது பற்றி இணையத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம்.யாரோ ஒருவருக்காக உழைத்து சம்பாதிப்பதை விட, தங்களது சொந்த ஐடியாக்களுக்கு உயிர் கொடுக்க இளைஞர்கள் பலர் விரும்புகின்றனர்.
இதையும் படிங்க: விண்வெளி வீரர்களுக்கு நாசா வெளியிட்ட இன்பச் செய்தி! இனி குடும்பத்துட்டன் வீடியோ காலில் பேசுவது முதல் ரீல்ஸ் போட வரை அனுமதி !!!
மற்றவர்களின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிவதை விட, தானே ஒரு தலைவனாக (Leader) இருந்து முடிவெடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். சொந்த தொழிலில் கடின உழைப்பும் திறமையும் இருந்தால் குறுகிய காலத்தில் அதிக இலாபம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை இளைஞர்களிடம் அதிகம் உள்ளது. வேலையில் இருந்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தான் சம்பள உயர்வு என்பது கிடைக்கும்.

சமூகத்தில் ஒரு "ஸ்டார்ட்அப் நிறுவனர்" (Startup Founder) என அழைக்கப்படுவதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். அதுமட்டுமின்றி, தான் தொடங்கும் தொழிலின் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கலாம் என்ற சமூகப் பொறுப்பும் ஒரு முக்கிய காரணமாகும்.
தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் சுயதொழில் தொடங்குவதை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களையும் கடனுதவிகளையும் வழங்குகின்றன.
முத்ரா கடன் (Mudra Loan) போன்ற திட்டங்கள் ஆரம்பக்கட்ட நிதிச் சிக்கல்களைத் தீர்க்க உதவுகின்றன. இன்குபேஷன் சென்டர்கள் (Incubation Centers) மூலம் புதிய ஐடியாக்களுக்குப் பயிற்சிகளும் வழிகாட்டல்களும் கிடைக்கின்றன.
சொந்த தொழில் தொடங்குவதில் சவால்கள் பல இருந்தாலும், "தோற்றாலும் பரவாயில்லை" ஒருமுறை முயற்சி செய்து பார்ப்போம் என்ற துணிச்சல் இன்றைய தலைமுறையினரிடம் அதிகமாக உள்ளது. வேலை தேடுபவர்களாக இருக்க விரும்பாமல் வேலை கொடுப்பவர்களாக மாறவே விரும்புகிறார்கள்.
இதையும் படிங்க: ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களே.! கொஞ்சம் இதை கவனியுங்கள்.!