அறுபதாம் கல்யாணம் ஏன் செய்கிறார்கள்.?! முறையாக எப்படி செய்வது.?!



how to marry 60th marriage and when it will did

பெற்றோர்களுக்கு திருமணம்

திருமணம் என்பது இருவர் மட்டுமல்லாமல் இருதரப்பு உறவினர்களும் ஒன்று கூடி மகிழக்கூடிய ஒரு தருணம். அப்படி தங்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் சேர்ந்து நடத்தக்கூடிய நிகழ்வு தான் அறுபதாம் கல்யாணம். 

இந்த அறுபதாம் கல்யாணத்திற்கு சஷ்டியப்பத பூர்த்தி, மணிவிழா என்றெல்லாம் பெயர்கள் இருக்கின்றன. தங்களது அறுபது ஆண்டுகால வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமல் யாருக்காவது தீங்கு செய்திருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்க அறுபதாம் கல்யாணம் ஒரு வாய்ப்பு.

இதையும் படிங்க: கணவர்களே.! இந்த ரகசியம் தெரிஞ்சா உங்க கல்யாண வாழ்க்கை அசத்தல் தான்.!

எப்போது செய்வார்கள்?

குடும்ப தலைவர் 60 வயது முடிந்து, அவரது 61 ஆம் வயதில் இந்த அறுபதாம் கல்யாணம் கொண்டாடப்படுகிறது. இளமை காலத்தில் நமக்கு பல்வேறு ஆசைகள் இருந்திருக்கலாம். ஆனால், வயதான காலத்தில் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளை காண வேண்டும் என்பதுதான் முதியோர்கள் அனைவரின் ஆசையாகவும் இருக்கும். 

திருமணம்

அப்படி அவர்களை கடைசி காலத்தில் மகிழ்வித்து பார்க்கக்கூடிய ஒரு சடங்கு தான் இது. முகூர்த்த நேரத்தில் மணமகன், மணமகள் கழுத்தில் புது தாலியை கட்டி இந்த சடங்கை நிறைவு செய்வார். இதன் பின்னர் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து புனித நீரால் அவர்களை குளிப்பாட்டி அவர்களது பாதங்களை கழுவி ஆசீர்வாதம் வாங்குவார்கள்.

பெரும் பாக்கியம்

கோவிலில் இந்த அறுபதாம் கல்யாணத்தை மேற்கொள்பவர்களை உறவினர்கள் மட்டுமல்லாமல் கோவிலுக்கு வரும் மற்றவர்களும் காலில் விழுந்து கலசநீரை ஊற்றி ஆசீர்வாதம் வாங்குவார்கள். இவ்வாறு வயதானவர்களிடம் ஆசி பெறுவது பெரும் புண்ணியமாக பார்க்கப்படுகிறது. 

இதனால், ஆசி பெரும் நபர்களுக்கு நீண்ட ஆயுளும், சுமங்கலி பாக்கியமும் கிடைப்பதாக நம்பப்படுகிறது. 60 ஆண்டுகள் நிறைவான வாழ்வை வாழ்ந்த அந்த நபரும், அவரது மனைவியும் மனப்பூர்வமாக மற்றவர்களுக்கு ஆசி வழங்கும் போது அவர்களுக்கு அதிக நன்மைகளும், மகிழ்ச்சியும் குடும்பத்தில் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஹெல்த்தியான சப்பாத்தி நூடுல்ஸ் செய்வது எப்படி? இப்படி ஒருமுறை ட்ரை பண்ணுங்க.!!