தீராத மூட்டு வலியா.! பிரண்டை + நல்லெண்ணெய் போதும்.!? இப்படி செய்து பாருங்கள்.?



Home remedies for knee pain

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் மூட்டு வலி பாதிப்பு அதிகமாக உள்ளது. நம் முன்னோர்கள் காலகட்டத்தில் மூட்டு வலி என்பது வயதானவர்களை பாதிக்கும் நோயாகவே இருந்து வந்தது. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் மாறிவரும் உணவு பழக்கங்களினாலும், அன்றாட வாழ்க்கை முறைகளினாலும் பல விதமான நோய் பாதிப்புகளுடன் இந்த மூட்டு வலி பாதிப்பும் அதிகமாக இளைஞர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

Knee Pain

மூட்டு வலிக்காக ஆங்கில மருந்துகள் பல இருந்து வருகின்றன. இதனை எடுத்துக் கொள்ளும் போது நம் உடலில் பலவிதமான பக்க விளைவுகள் ஏற்பட்டு நோய் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே நம் பாரம்பரிய மருத்துவமான சித்த வைத்திய முறைப்படி பிரண்டையை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது மூட்டு வலி பாதிப்பு குறைகிறது. இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

தேவையான பொருட்கள்:-
பிரண்டை - 1/2 கிலோ,
பூண்டு - 15,
வர மிளகாய் - 3
புளி - ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவு,
உப்பு - தேவையான அளவு,
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி,
நல்லெண்ணெய் - 1/4 கப்,
கடுகு - 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் அரை கிலோ பிரண்டையை நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி அதில் உரித்த பூண்டு போட்டு பொரிந்ததும் பிரண்டையை போட்டு நன்றாக வறுத்தெடுக்க வேண்டும். பின்னர் ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து எடுத்த பிரண்டை மற்றும் பூண்டு சேர்த்து புளி, வரமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

Knee Pain

பின்பு அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து அரைத்த கலவையை ஊற்றி வதக்கி காற்று போகாத பாட்டிலில் போட்டு மூடி வைத்துக் கொண்டால் ஒரு மாதத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பிரண்டை +நல்லெண்ணெய் துவையல் மூட்டு வலி மட்டுமல்லாது, எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.