தேர்வெழுதும் மாணவ - மாணவிகள் உடல், மன ரீதியாக தயாராகுவது எப்படி?.. மாணாக்கர் செல்வங்களே அசத்துங்கள்.!

தேர்வெழுதும் மாணவ - மாணவிகள் உடல், மன ரீதியாக தயாராகுவது எப்படி?.. மாணாக்கர் செல்வங்களே அசத்துங்கள்.!



exam preparation tips for students

மாணவர்கள் பொதுத்தேர்வில் அக்கறை செலுத்தும் அதே அளவு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சில விஷயங்களில் அக்கறை செலுத்த வேண்டும். அவையாவன என்பதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

★தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் வழி கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், ஸ்மார்ட்போன், கணினி மற்றும் மடிக்கணினி திரைகளை மாணவர்கள் அதிகம் கவனித்து படிக்கின்றனர். இது அவர்களின் கண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

★தொடர்ச்சியாக படித்துக் கொண்டே இருப்பதால், மூளை சோர்வடையும். போதுமான அளவு மூளைக்கு ஓய்வு கொடுப்பது முக்கியம். ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தேர்ந்தெடுத்து சரியான நேரத்தில் சாப்பிடுவது மற்றும் நன்றாக தூங்குவது போன்ற விஷயங்களை பின்பற்றினால் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்படும்.

★படுத்துக் கொண்டே படிப்பதால், அது விரைவில் கண்களை சோர்வடைய செய்துவிடும். மேலும், படிக்கும் போது புத்தகத்திற்கும் கண்ணுக்கும் இடையே 25 சென்டி மீட்டர் இடைவெளியில் பராமரிக்க வேண்டும்.

★ஒரே இடத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் படிப்பதால் விரைவில் சோர்வடைந்து விடுவீர்கள். எனவே, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது 10 நிமிடம் படிப்புக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

student

★படிக்கும்போது நொறுக்கு தீனிக்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் கண்களின் ஆரோக்கியத்திற்கும், மூளை சுறுசுறுப்பாக இருப்பதற்கும் துணைபுரியும்.

★படுக்கும் அறையில் வெளிச்சம் பிரகாசமாக இருக்க வேண்டும். மங்கலான வெளிச்சம் நிலவுவதால் விரைவில் கண்களுக்கு சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

★படிக்கும் போது தூக்கம் வந்தால் கண்களை தனது கைகளால் தேய்க்க கூடாது. அது கண்ணுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்துவிடும். அதற்கு பதில் குளிர்ந்த நீரை கண்களின் சீரான இடைவெளியில் தெளித்து வரலாம்.

★ஆன்லைனில் படிக்கும் போது மானிடரை 45 டிகிரி கோணத்தில் வைக்க வேண்டும். இல்லையெனில், அது கண்ணனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

student

★கால அட்டவணை தயாரித்துவைத்து கொண்டு படிப்பது, தூங்குவது, சாப்பிடுவது, ஓய்வெடுப்பது, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்று இருந்தால் மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கலாம்,

★உடலில் நீர் அச்சத்தை பராமரிப்பது புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். எனவே ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். அதனை தேர்வு சமயத்தில் தவறாமல் பின்பற்றினால் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.