சுடுகாட்டில் எரிந்துகொண்டிருந்த பெண்ணின் உடல் மீது விழுந்து வாலிபர் தற்கொலை.! அதிர்ச்சி சம்பவம்.!

சுடுகாட்டில் எரிந்துகொண்டிருந்த பெண்ணின் உடல் மீது விழுந்து வாலிபர் தற்கொலை.! அதிர்ச்சி சம்பவம்.!



young man suicide in sudukadu

மத்திய பிரதேசம் மாநிலம் சாஹர் மாநிலம் மஞ்குவா கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி. இவர் கடந்த வியாழக்கிழமை மாலை கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜோதியின் உடலை மீட்ட குடும்பத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை இறுதிச்சடங்கு செய்து சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.

ஜோதியின் மரணம் குறித்து தகவலறிந்த அவரின் உறவுக்கார இளைஞனான கரண் என்ற இளைஞர். ஜோதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். ஜோதியின் உடல் சுடுகாட்டில் வைத்து எரியூட்டப்பட்டது. ஜோதியின் சடலம் எரிந்து கொண்டிருந்தபோது கரன் திடீரென எரிந்துகொண்டிருந்த சிதை முன்பு சென்றுள்ளார். ஜோதியின் இழப்பை தாங்க முடியாமல் தானும் அந்த எரியும் சிதையிலேயே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை பார்த்த பொதுமக்கள், கரணை மீட்டு, தீக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், படுகாயமடைந்த கரண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கரனின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.