இனி முதல்வரை தேடி வாட்சாப்புக்கு போனாலே போதும்.. புதிய அப்டேட்.. கொடுத்த CM.!



yogi athithyanath in whatsap channel

உத்தரப்பிரதேச மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் வாட்ஸ் அப்பில் ஒரு புதிய சேனலை துவங்கி இருக்கிறார். அந்த சேனலுக்கு முதலமைச்சர் அலுவலகம், உத்திரபிரதேசம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

Uttar pradesh

பொதுமக்கள் அனைவரும் தங்கள் குறைகளை இந்த வாட்ஸாப் சேனல் மூலமாக முதல்வர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என்று ஒரு அறிவிப்பை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார். இந்த சேனல் மூலமாக உத்தர பிரதேச மக்கள் நேரடியாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியும். 

Uttar pradesh

வாட்ஸ் அப் சேனல் துவங்கிய முதல் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். மேலும், முதல்வர் அலுவலக சமூக வலைதள பக்கத்தில் உபி மாநிலத்தில் வசிக்கும் 25 கோடி மக்களும் ஒரே குடும்பம் என்று தெரிவிக்கப்பட்டு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.