இதுதான் என்னுடைய கொள்கை.! அரசியல் என்ட்ரி குறித்து செம தெளிவாக நடிகர் ராகவா எடுத்துள்ள முடிவு!!
நிறைய க்ரைம் சீரியல் பார்த்து கணவரை கொலை செய்த மனைவி... என்ன காரணம் தெரியுமா.?
நிறைய க்ரைம் சீரியல் பார்த்து கணவரை கொலை செய்த மனைவி... என்ன காரணம் தெரியுமா.?
உத்தரப்பிரதேச மாநிலம் கல்யாணப்பூர் சிவ்லி பகுதியைச் சேர்ந்தவர் ரிஷப் - சப்னா தம்பதியினர். ரிஷப் கடந்த 27 ஆம் தேதி தனது நண்பருடன் திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்று வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மர்மநபர்கள் சில பேர் ரிஷப்பை தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த ரிஷப் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய இரண்டு நாட்களிலேயே மீண்டும் உடல்நிலை மோசமாகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் ரிஷப் தாக்கப்பட்ட இடத்தில் கிடைத்த செல்போன் சிக்னலை வைத்து கொலையாளிகளை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
அதாவது ரிஷப் மனைவியே சொத்திற்கு ஆசைப்பட்டு கணவனை கூலி ஆட்களை வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனால் கணவர் உயிர் பிழைக்கவே வீட்டிற்கு வந்த அவரை அதிக மருந்துகளை கொடுத்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. அதனை அடுத்து போலீசார் சப்னா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நபர்களை கைது செய்துள்ளனர்.