#JustIN: மாநில பாஜக தலைவர் மீது காவல்துறையினர் தடியடி; மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.!

#JustIN: மாநில பாஜக தலைவர் மீது காவல்துறையினர் தடியடி; மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.!



WB BJP State President Sukanta Majumdar 

 

மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள பாசிர்ஹத் பகுதியில் பாஜக - காவல்துறையினர் இடையே நடந்த தள்ளுமுள்ளு காரணமாக, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெறுவதால், அதனை அகற்ற பாஜகவும், ஆட்சியை நிலைநிறுத்த மம்தா பானர்ஜி தரப்பும் கடுமையாக போராடி வருகிறது. 

இதனால் அவ்வப்போது அரசியல்ரீதியான மோதல்களும் நடைபெறும் நிலையில், தற்போது மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் மீது காவலர்கள் தடியடி நடத்தி இருக்கின்றனர். காவலர்கள் - பாஜக தொண்டர்கள் இடையே எழுந்த கைகலப்பின் காரணமாக தடியடி நடத்தப்பட்டுள்ளது. 

இதனால் மயக்கமடைந்த மேற்குவங்க பாஜக தலைவர் சிகிச்சைக்காக காவல்துறை வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் மாநிலத்தில் பதற்ற சூழலை உருவாக்கி இருக்கிறது.