ஓடிடியில் வெளியாகும் சூரியின் மாமன்.! எப்போது? வெளிவந்த தகவல்!!
62 வயதில் இளம்பெண் மீது சபலம்.. உறவின் போது சதித்திட்டம்.. துடிதுடிக்க கொல்லப்பட்ட முதியவர்.!

உத்தரகண்ட் மாநிலத்தில் கீதா என்ற பெண் தனது கணவரை பிரிந்து வசித்து வந்துள்ளார். இவருக்கு லால் என்ற 62 வயது முதியவருடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது. லாலிடம் இருந்து கீதா தனது பண தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் கீதாவுக்கு ஹிமன்சு என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
எனவே, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பண தேவை ஏற்பட்ட நிலையில் முதியவரை மிரட்டி பணம் சம்பாதிக்க திட்டமிட்டனர். எனவே, அவரிடம் கீதா ஆசையாக பேசி உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி தங்கள் இடத்திற்கு வரவழைத்துள்ளார்.
அவரது பேச்சை நம்பி லாலும் வந்துள்ளார். கேமராவை அந்த தம்பதி மறைத்து வைத்து வீடியோ எடுக்க முயற்சித்துள்ளனர். இதை அறிந்த லால் உஷாரானார். அவர் இவர்களது திட்டப்படி நடக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: "ஜாலியா இருக்கும் போதே., காலி பண்ணிட்டேன்" கள்ளக்காதலி பகீர் வாக்குமூலம்.! போலீசையே அதிர வைத்த சம்பவம்.!
எனவே, கீதா மற்றும் ஹுமன்சு இருவரும் சேர்ந்து லாலை கொலை செய்தனர். இந்த நிலையில், தற்போது தம்பதிகள் இருவரும் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: சார்ஜரால் அடித்து, காயமாக்கி, அந்த இடத்தில் மிளகாய் பொடியை தூவி, தாயின் கள்ளகாதலன் கொடூரம்.!