காதலுக்கு எதிரியான மதம்; விஷம் கலந்து குடித்து காதல் ஜோடி உயிரை மாய்த்த சோகம்.! 

காதலுக்கு எதிரியான மதம்; விஷம் கலந்து குடித்து காதல் ஜோடி உயிரை மாய்த்த சோகம்.! 



Uttar Pradesh Varanasi Hindu Muslim Love Couple Suicide 

 

தங்களின் காதலுக்கு மதம் தடையாக இருந்ததால், போராடிப்பார்த்த காதல் ஜோடி இறுதியில் உயிரை மாய்த்துக்கொண்டது.

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியை சேர்ந்தவர் ஆசிப் (வயது 21). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் பிரியங்கா (வயது 19) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். 

காதல் ஜோடி ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் இருதரப்பு பெற்றோர் மதத்தை காரணம் காட்டி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

தங்களின் பெற்றோரிடம் பலமுறை திருமணத்திற்காக போராடிப்பார்த்தும் பலனில்லை. இறுதியில் தங்களின் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்கமாட்டார்கள் என்பதை உறுதி செய்த காதல் ஜோடி, தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளது.

இருவரும் ஒருசேர போனில் தொடர்புகொண்டவர்கள், தங்களின் திட்டப்படி குளிர்பானத்தில் உயிரை பறிக்கும் கடுமையான விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டனர். 

தகவல் அறிந்து இருவரின் உடலையும் மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்கு பின்னர் இருதரப்பு பெற்றோரிடமும் உடலை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.