19 வயது இளம்பெண் 20 நாட்களாக ஐவர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்..!

19 வயது இளம்பெண் 20 நாட்களாக ஐவர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்..!



Uttar Pradesh Sambhal 19 Aged young Girl Raped by 5 Man Team for 20 More Days 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சாம்பால் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், கடந்த செப். 27ம் தேதி முகம்மத் அர்சத் மற்றும் ஆஸிம் ஆகியோரால் கடத்தப்பட்டுள்ளார். 

இளம்பெண்ணை கடத்திய குற்றவாளிகள், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள தனது நண்பர் ஆஷிக் கான் என்பவரின் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.

முதலில் மேற்கூறிய மூவர் சேர்ந்து இக்கொடூரத்தை அரங்கேற்றி இருக்கின்றனர். பின், இவர்கள் மூவருடன் சோனி ஹுசைன், பயாஸ் ஆலம் என ஐவர் சேர்ந்து பெண்மணியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த செயலுக்கு ஷரிஆ பேகம், ஸிபா கான் என்ற இரண்டு பெண்களும் உடந்தையாக இருந்துள்ளனர். கிட்டத்தட்ட 20 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர், பெண்மணி கடந்த அக்.12ல் இவர்களின் பிடியில் இருந்து தப்பி தனது வீட்டிற்கு வந்துள்ளார். 

Uttar pradesh

உடல்நிலை மோசமாகி வீட்டிற்கு வந்த இளம்பெண்ணை மீட்டு, அவரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார்.   

தற்போது அவர் உடல்நலம் தேறி வீட்டிற்கு வந்துவிட்ட நிலையில், தன்னை சீரழித்த கயவர் கும்பலுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் 367D கூட்டுப்பாலியல் வன்கொடுமை, 366 கடத்தல் மற்றும் கட்டாய திருமணம், 323 துன்புறுத்துதல், 328 காயப்படுத்துதல், 344 தவறாக வழிநடத்த உயர்ச்சித்தல், 566 குற்றச்செயல்களை அரங்கேற்றுதல் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

குற்றவாளிகள் ஏழு பேரையும் அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.