விளையாட்டின் விபரீதம்! 60 அடி உயர தண்ணீர் தொட்டியில் 16 மணி நேரமாக மரணத்துடன் போராடிய சிறுவர்கள்.... கடைசியில் களம் இறங்கிய ஹெலிகாப்டர்! அதிர்ச்சி வீடியோ!!!
உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்த நகர் மாவட்டத்தில், சமூக வலைதளத்திற்காக ரீல்ஸ் எடுக்க சென்ற 5 சிறுவர்களின் முயற்சி விபரீதமாக மாறியது. 60 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறியபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் 16 மணி நேரம் மேலே சிக்கிய நிலையில் இருந்து இந்திய விமானப்படையால் மீட்கப்பட்டனர்.
பழைய ஏணி உடைந்து விபத்து
சனிக்கிழமை மாலை நண்பர்கள் ஐவர் அப்பகுதியில் உள்ள உயரமான தண்ணீர் தொட்டிக்கு ஏறினர். வீடியோ எடுக்கும்போது பயன்படுத்திய பழைய இரும்பு ஏணி திடீரென உடைந்து கீழே விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் சித்தார்த் என்ற சிறுவன் கீழே விழுந்து உடனடியாக உயிரிழந்தான். அவருடன் இருந்த ஷனி, கோலு ஆகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
உச்சியில் சிக்கிய இருவர்
ஏணி உடைந்ததால் பவன் மற்றும் கல்லு ஆகிய இரு சிறுவர்கள் மேலே சிக்கிக் கொண்டனர். கீழே இறங்க வழியில்லாமல் இரும்புக் கம்பிகளைப் பிடித்தபடி இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஒரு நொடி அலட்சியத்தால் தாத்தாவின் கண்முன்னே உயிர் பிரிந்த பேரன்! ஈரக்கொலை நடுங்க வைக்கும் ரயில் விபத்து வீடியோ!!!
16 மணி நேர போராட்டம் – விமானப்படை மீட்பு
தகவல் கிடைத்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) இரவு முழுவதும் முயன்றது. ஆனால் மழை மற்றும் சாலை வசதி குறைவு காரணமாக முன்னேற்றம் இல்லை. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் இந்திய விமானப்படையின் உதவியை கேட்டது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு வந்த இந்திய விமானப்படை Mi-17 V5 ஹெலிகாப்டர், மோசமான வானிலையிலும் சுமார் 15 நிமிடங்களில் இரு சிறுவர்களையும் பாதுகாப்பாக மீட்டது.
மீட்கப்பட்ட சிறுவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். காயமடைந்த மற்ற இருவரும் சிகிச்சையில் இருந்து தற்போது அபாயத்தைத் தாண்டியுள்ளனர். சமூக வலைதள ஆர்வம் காரணமாக நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
पाच मुलं गावातील पाण्याच्या टाकीवर चढले. अचानक लोखंडी शिडी तुटल्याने 3 खाली कोसळले आणि 2 वर अडकले. टाकीवर अडकलेल्या मुलांची 16 तासानंतर लष्कराच्या हेलिकॉप्टरद्वारे सुटका करण्यात आली. उत्तर प्रदेशमधील सिद्धार्थनगर येथे ही घटना घडली असून यात एका मुलाचा मृत्यू झाल्याचे समोर आले आहे. pic.twitter.com/TbXIWN8WlR
— Saamana Online (@SaamanaOnline) May 3, 2026