சுங்கச்சாவடியில் அடாவடி.. பெண் ஊழியரை ஆவேசமாக புரட்டியெடுத்த பெண்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!

சுங்கச்சாவடியில் அடாவடி.. பெண் ஊழியரை ஆவேசமாக புரட்டியெடுத்த பெண்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!



Uttar Pradesh Noida Toll Plaza Women Employee attacked 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடியில் சம்பவத்தன்று வாகனம் ஒன்று கடந்து சென்றுள்ளது. 

அப்போது, அந்த வாகனத்திற்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு பெற வாகனத்தில் வந்தவர்கள் பேசியுள்ளனர். சுங்கச்சாவடி பெண் அதிகாரி அடையாள ஆவணத்தை கேட்டுள்ளார். 

Uttar pradesh

அதனை கொடுக்க மறுத்த பெண்மணி, சுங்கச்சாவடி பெண் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்து கடுமையாக தாக்கி இருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட சுங்கச்சாவடி பெண் ஊழியர் சோனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் விசாரணை நடந்து வரும் நிலையில், தாக்குதல் சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.