விஜய் சேதுபதியின் 51வது படம்.! ரசிகர்களை கவர்ந்த டைட்டில் டீசர்.! இதோ..
தேர்தல் பணியில் ஈடுபட்ட காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை; இரயில் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் தயாப் கான். இவர் தற்போது தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்.
இந்நிலையில், இன்று அவர் அம்ரோஹா இரயில் நிலையம் வந்துள்ளார். அங்கு துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அவரின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கான் தற்கொலைக்கு முன் வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
அதில், "நான் என்ன செய்யப்போகிறேன் என தெரியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள். இதனை கோழைத்தனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். எனக்கு வேறு வழியில்லை" என கூறியுள்ளார்.