144 Section: உத்திரபிரதேசம் மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு; தொடரும் பதற்றத்தால் குவிக்கப்படும் காவல் துறையினர்..!

144 Section: உத்திரபிரதேசம் மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு; தொடரும் பதற்றத்தால் குவிக்கப்படும் காவல் துறையினர்..!



Uttar Pradesh 144 Section Implemented


உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ப்ரயக்ராஜ் மாவட்டத்தில் வசித்து வந்த சகோதரர்கள் ஆதிக் அகமத், அஷ்ரப் அகமத். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

சகோதரர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பின்னாளில் அரசியல் பாதைக்கு வந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு என தனி குரல் அங்கு இருக்கிறது. இந்த நிலையில் தான் சகோதரர்கள் இருவரும் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

பத்திரிகையாளர் சந்திப்பின்போதே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற நிலையில், அவற்றின் விடியோவும் வெளியானது. அம்மாநிலத்தில் தொடர் பதற்றம் நிலவி வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, முக்கிய நகரங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.