கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
23 வயது இளம்பெண் மூவர் கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை: குற்றவாளியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண், தனியாக இருசக்கர வாகனம் ஓட்டிப்பழகி இருக்கிறார். அப்போது, அவர் ஆர்வமிகுதியால் தனியாக வாகனத்தை இயக்கி சென்றுள்ளார்.
அச்சமயம் பெண்மணியை தாக்கி கடத்திச்சென்ற மூன்று பேர் கும்பல், அவரை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பின் அவர்களிடம் இருந்து பெண்மணி தப்பி இருக்கிறார்.
தப்பிவந்த பெண்மணி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் துரித விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மூவர் கும்பலுக்கு அதிகாரிகள் வலைவீசிய நிலையில், ஒருவர் அதிகாரிகளால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார். எஞ்சிய 2 பேருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.