பணி நேரத்தில் சீருடையில் சரக்கு அடித்த போலீசார்.! தீவிரமாக பரவிய வீடியோ.! உயர் அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை.!

பணி நேரத்தில் சீருடையில் சரக்கு அடித்த போலீசார்.! தீவிரமாக பரவிய வீடியோ.! உயர் அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை.!


two-policemen-in-uniform-drinking-alcohol-during-duty-h

கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே உள்ள ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரங்கசாமி மற்றும் அதே ரயில் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ராமேகவுடா. இவர்கள் இருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது சீருடையில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவியது. இதனையடுத்து இவர்கள் இருவர் மீதும் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த வீடியோவில் இருந்தது இவர்கள் இருவரும் தான் என உறுதி செய்தனர். 

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச கவுடா சீருடையில் மது அருந்திய உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.