BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ரீல்ஸ் மோகத்தால்.. மீண்டும் ஓர் பகீர் செயல்.. பதறவைக்கும் வீடியோவால்.. அதிர்ச்சி.!
சமூக வலைதளங்களில் தங்களது வீடியோக்கள் மூலம் விரைவாக பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணம், சமீப காலமாக பல தவறான சம்பவங்களுக்கு காரணமாகி வருகிறது. லைக், வியூஸ், ஷேர் ஆகியவற்றுக்காக சிலர் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது கவலைக்குரிய போக்காக மாறியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் ரீல்ஸ் வீடியோ எடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக வடமாநில இளைஞர் ஒருவரை கத்தியால் தாக்கிய சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களுக்காக மேற்கொள்ளப்படும் வன்முறைச் செயல்களின் தீவிரத்தை வெளிப்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது, ஒரு நபர் தனது நண்பரை உயரமான பாலத்திலிருந்து கீழே தள்ளி வீடியோ பதிவு செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த நபருக்கு நீச்சல் தெரியாமல் இருந்திருந்தால்? அல்லது கீழே பாறைகள், வேறு ஆபத்துகள் இருந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அதிவேகமாக வந்த ரயிலில் திடீரென தண்டவாளத்தில் வந்து படுத்த இளையர்! ரயில் ஓட்டுநர் ஹாரன் அடித்தும்.... பதை பதைக்க வைக்கும் வீடியோ!
कभी कभी दोस्त भी दुश्मन बन जाता हे 🫂
— Manzar (@manz39754) December 29, 2025
क्या ये स्क्रिप्टेड हे या रियल 😧 pic.twitter.com/tnH8XQiycN
இத்தகைய செயல்கள் தனிநபரின் பொறுப்பற்ற செயலாக மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் ஆபத்தான உள்ளடக்கங்களுக்கு கிடைக்கும் கவனத்தையும் கேள்விக்குறியாக்குகிறது. பாதுகாப்பு மற்றும் சட்ட விதிகளை மீறும் வகையிலான வீடியோக்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரியது.
சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம். இதுபோன்ற ஆபத்தான செயல்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வும், சட்ட ரீதியான நடவடிக்கைகளும் மிகவும் அவசியமாகின்றன.