கள்ளக்காதலை எதிர்த்த மனைவி.. ராகி உருண்டையில் சைனைடு கலந்து கொடூரமாக கொலை செய்த கணவன்.. பரபரப்பு சம்பவம்..!

கள்ளக்காதலை எதிர்த்த மனைவி.. ராகி உருண்டையில் சைனைடு கலந்து கொடூரமாக கொலை செய்த கணவன்.. பரபரப்பு சம்பவம்..!



The wife who resisted counterfeiting.. The husband brutally murdered by mixing cyanide in ragi ball.. Sensational incident..!

கர்நாடக மாநிலம் சிக்கமங்களூருவில் உள்ள தேவவிர்ந்தா பகுதியில் வசித்து வருபவர்கள் தர்ஷன் - ஸ்வேதா தம்பதியினர். இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்து வந்துள்ளனர். பின்னர் இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் தர்ஷன் அவரது மனைவி ஸ்வேதாவுடன் சேர்ந்து பெங்களூரு கொடிக்கேஹள்ளி பகுதியில் ட்ரூ மெடிக்ஸ் லேப் ஒன்று நடத்தி வந்துள்ளனர். இந்த சூழலில் தர்ஷனுக்கு கணவரை இழந்த பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த ஸ்வேதா கணவரை கடுமையாக கண்டித்ததால் அந்தப் பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பை கைவிடுவதாக தர்ஷன் கூறியுள்ளார்.

Murder​​​​​​

இதனையடுத்து தர்ஷன் பல பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தேவவிரிந்தா கிராமத்தில் உள்ள தனது கணவன் வீட்டிற்கு ஸ்வேதா சென்ற நிலையில் திடீரென்று உயிரிழந்துள்ளார். மேலும் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்ததாக கூறி அவரது கணவர் அவசர அவசரமாக அவரது உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இந்நிலையில் ஸ்வேதாவின் குடும்பத்தினர் தங்கள் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்வேதாவின் கணவரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஸ்வேதா கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து ராகி உருண்டையில் சைனைட் கலந்து அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ஸ்வேதாவின் கணவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.