பல முறை ஊசியால் குத்தி.. பெத்த தாயை கொடூரமாக கொலை செய்த மகன்.! பயங்கர சம்பவம்.!



the-son-who-brutally-murdered-his-mother-in-delhi-polic

இந்திய தலைநகர் டெல்லியில்  மகனே  தாயை ஊசியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

டெல்லியில் ரோகிணி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ரிங்கு இவருக்கு வயது 38. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவரான இவர் தாய் சத்வந்த் கவுர் (64) உடன் வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென ஆத்திரமடைந்த ரிங்கு தனது தாயை பலமுறை ஊசியால் குத்தி இருக்கிறார்.

India

இதில் அவரது தாய் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையை தொடர்பு கொண்டு ரிங்கு தனது தாயையோசியால் குத்தி காயப்படுத்தியதாக தெரிவித்திருக்கிறார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது தாயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

India

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு ரிங்கு விடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகனே தாயை கொலை செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.