வைத்திய ரகசியத்தை தெரிந்து கொள்ள நாட்டு வைத்தியர் சித்ரவதை செய்து கொலை.. தீவிரவாத அமைப்புடன் தொடர்பா? பரபரப்பு தகவல்..!

வைத்திய ரகசியத்தை தெரிந்து கொள்ள நாட்டு வைத்தியர் சித்ரவதை செய்து கொலை.. தீவிரவாத அமைப்புடன் தொடர்பா? பரபரப்பு தகவல்..!



the-doctor-was-assaulted-and-killed

ஷாபா செரீப் என்ற 60 வயதுடைய நாட்டு வைத்தியர், கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ராஜீவ் நகரில் வசித்து வந்தார். இவரை கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாதத்திலிருந்து காணவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் மைசூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

மேலும், விசாரணையில் ஷாபா ஷெரீபை கேரளா மாநிலத்தில் உள்ள நிலம்பூரை 
சேர்ந்த தொழிலதிபரான ஷைபின் அஷரப் என்பவர் கடத்தி, கொலை செய்தது தெரியவந்தது.  அஷ்ரப் மைசூரிலிருந்து ஷாபா ஷெரீபை கடத்திவந்து தனது வீட்டில் 15 மாதம் அடைத்து வைத்திருந்து சித்திரவதை செய்து கொலை செய்துள்ளார். அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியுள்ளனர். ஷாபா ஷெரிபின் வைத்திய ரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே, அவரை சித்திரவதை செய்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் ஷைபின் அஷ்ரப் மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஷைபின் அஷரப் குறித்து தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.  மிக குறுகிய காலத்திலேயே அஷரப் 500 கோடிக்கு அதிபதியாகி உள்ளார்.

இந்த சொத்து இவருக்கு எப்படி சேர்ந்தது என்பது மர்மமாக உள்ளது. ஆகவே தீவிரவாத அமைப்புகளுடன் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். மேலும், கேரளாவை சேர்ந்த சில தொழிலதிபர்கள் உள்பட 5 பேரை கொலை செய்ய அவர் திட்டம் தீட்டியுள்ளார் இதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இதையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீர்மானித்துள்ளனர்.