கள்ளக் காதலால் கணவருக்கு நேர்ந்த கொடூரம்... கொன்று புதைத்து கழிவுநீர் தொட்டி கட்டிய மனைவி...!!

கள்ளக் காதலால் கணவருக்கு நேர்ந்த கொடூரம்... கொன்று புதைத்து கழிவுநீர் தொட்டி கட்டிய மனைவி...!!



the-cruelty-that-happened-to-the-husband-due-to-fake-lo

டெல்லி அருகே கணவரை கொன்று புதைத்து அதன் மீது கழிவுநீர் தொட்டி கட்டிய பெண், கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். 

டெல்லி அருகே உள்ள காஜியாபாத் நகரை சேர்ந்த சோட்டேலால் என்பவர், கடந்த 10-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ஒரு வாரமாக தனது சகோதரர் சதீஷ் பாலை (42) காணவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் சதீஷ் பால் காணாமல் போய் சில நாட்கள் ஆன நிலையில் அவர் மனைவி நீத்து புகார் அளிக்காதது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால், நீத்துவை  விசாரித்தனர். ஆனால் அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. 

இந்நிலையில் நீத்துவையும், அவரது கணவர் சதீஷையும் அடிக்கடி வந்து சந்தித்துச் சென்ற ஹர்பால் என்பவரை  பிடித்து விசாரித்தனர். விசாரணையில், நீத்து, கவுரவ் என்பவரின் உதவியுடன் சதீஷை கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டார். சதீஷ் குடும்பத்துக்கு பழக்கமான ஹர்பாலுக்கும், நீத்துவுக்கும் இடையே கள்ளக்காதல் உண்டானது.

இதனால் நீத்துவின் கணவரை கொலை செய்து விட்டு, திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். சதீஷை கொல்வதற்கு தனது நண்பரான கவுரவ் என்பவரை பயன்படுத்திக்கொள்ள ஹர்பால் முடிவெடுத்தார். கடந்த 2-ஆம் கணவர் சதீஷுக்கு நீத்து டீ யில் தூக்கமாத்திரையை கலந்து கொடுத்தார். அவர் நன்றாக உறங்கியதும் நீத்துவும், மற்ற இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர். 

கள்ளக்காதலன் ஹர்பாலும், அவரது நண்பர் கவுரவும் கொத்தனார்கள். அவர்கள் நீத்துவின் வீட்டின் அருகே புதிதாக ஒரு வீட்டை கட்டிக்கொண்டிருந்தனர். அங்கேயே சதீஷின் உடலைப் புதைக்க முடிவெடுத்தனர். அதன்படி அங்கு உடலை புதைத்து, அதன் மீது கழிவுநீர் தொட்டியை கட்டினர். கள்ளக்காதலனின் வாக்கு மூலத்தில் இந்த கொலை வெளிச்சத்துக்கு வந்தது. 

வீட்டின் உரிமையாளரின் அனுமதி பெற்று காவல்துறையினர் செப்டிங் டேங்கை உடைத்து. புதைக்கப்பட்டிருந்த சதீஷின் உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். ஹர்பாலையும், நீத்துவை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான நண்பர் கவுரவை தேடிவருகின்றனர்.