பகீர் சம்பவம்... 3 வயது சிறுவனை பெற்றோரின் கண்முன்னே கடித்து குதறிய தெரு நாய்கள்... கதறி துடித்த பிஞ்சு.!

பகீர் சம்பவம்... 3 வயது சிறுவனை பெற்றோரின் கண்முன்னே கடித்து குதறிய தெரு நாய்கள்... கதறி துடித்த பிஞ்சு.!



stray-dogs-attacked-and-killed-a-3-year-old-boy-infront

குஜராத் மாநிலத்தில் மூன்று வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத்  மாநிலம்  அம்ரேலி மாவட்டம் தாம்நகர் என்ற பகுதியைச் சார்ந்த விவசாயியின் மகன் ரோனக் ரத்வா. இந்த சிறுவனுக்கு வயது மூன்று.

இந்த சிறுவனின் பெற்றோர்களான மதுபாய் மற்றும் சித்பரா  தங்களது வயலிற்கு வேலைக்கு சென்று இருக்கின்றனர். அப்போது இவர்களுடன் சிறுவனும்  சென்று இருக்கிறான். பெற்றோர் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது சிறுவன் அருகே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான்.

gujarat

அப்போது அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய்கள் சிறுவனை கடித்து குதற ஆரம்பித்திருக்கின்றன. இதனால் வலியால் துடித்து அலறி இருக்கிறான் சிறுவன். சிறுவனின் கழுத்து வயிறு உள்ளிட்ட உடலின் பல இடங்களிலும் நாய்கள் கடித்து குதறி உள்ளன. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் அவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன் அனுமதிக்கப்பட்ட சில  மணி நேரங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் தெருநாய்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தாத அரசாங்கத்தின் எத்தனமான போக்கையும் பொதுமக்கள் கண்டித்துள்ளனர்.