பெற்ற தாயை கொலை செய்துவிட்டு நண்பர்களுக்கு பார்ட்டி வைத்த 16 வயது சிறுவன்.! அதிர்ச்சி பின்னணி

பெற்ற தாயை கொலை செய்துவிட்டு நண்பர்களுக்கு பார்ட்டி வைத்த 16 வயது சிறுவன்.! அதிர்ச்சி பின்னணி


son killed his mom

பப்ஜி விளையாடுவதை கண்டித்ததால், பெற்ற தாயை 16 வயது சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் சாதனா. இவரது கணவர் ராணுவத்தில் பணியாற்றுகிறார். இந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகன் மற்றும்
10 வயதில் ஒரு மகளும் இருந்துள்ளனர்.  கணவர் ராணுவத்தில் பணியாற்றுவதால் சாதனா தனது பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் சாதனாவின் மகன் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார்.

இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவன் பப்ஜி விளையாடுவதை தாய் சாதனா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து பெற்ற தாயை சுட்டுக் கொன்றுள்ளான். பின்னர் அவரின் சடலத்தை ஏ.சி அறையில் வைத்துவிட்டு, துர்நாற்றம் வராமல் இருக்க ரூம் ஸ்ப்ரேயை அடித்துள்ளான். மேலும் தாய் கொலை செய்யப்பட்டதை பார்த்த10 வயது தங்கையை ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளான்.

மேலும், தனது நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்த அந்த சிறுவன், அவர்களுக்கு உணவு ஆர்டர் செய்து பார்ட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், சிறுவனின் தந்தைக்கு தகவல் அளித்துள்ளனர். அவர் வீட்டிற்கு வந்தபோது தனது மனைவி அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது சிறுவன் உண்மையை ஒப்புக்கொண்டான். இதனையடுத்து சாதனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சிறுவனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.