தாயை வீட்டிற்குள் வைத்து 17 வயது மகன் செய்த செயல்!. கதறிய தாய்!.



son beat his mom

கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரைச் சேர்ந்த 50 வயது தாய், தன் மகன் சரியாக படிப்பில் கவனம் செலுத்தமாட்டீங்கிறான், இதனால் அவனுடைய எதிர்காலம் என்ன ஆகும் என்று பக்கத்து வீட்டார்களிடம் கூறியுள்ளார்.

இதனால் அவரின் 17 வயது மகன் மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளான். இதேபோல் அவனது தாய் பலரிடம் கூறி புலம்பியதால் கோபம்கொண்ட மகன்  வீட்டில் இருந்த துடப்பத்தை எடுத்து அவரை அடித்துள்ளார்.

தன்னை பற்றி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பேச கூடாது என்று கூறி எச்சரித்துள்ளான்.  நீங்கள் மீண்டும் மறுபடியும் அவ்வாறு யாரிடமாவது கூறினால், இதேபோன்று தான் உன்னை அடிப்பேன் என மிரட்டியபடி அடித்துள்ளான். 

இதனை தடுக்க முற்பட்ட சகோதரியையும் சிறுவன் அமைதியாயிரு என தடுத்துள்ளான். இவை அனைத்தும் சகோதரியால் வீடியோ பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.