பூட்டிய வீட்டிற்குள் கேட்ட செல்போன் அழைப்பு... திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பூட்டிய வீட்டிற்குள் கேட்ட செல்போன் அழைப்பு... திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!



Software Engineer committed suicide and murder his wife and son in Pune

மகாராஷ்டிரா மாநிலம் புனே அவுந்த் பகுதியை சேர்ந்தவர் சுதீப்தோ கங்குலி - பிரியங்கா தம்பதியினர். இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளார். சுதீப்தோ கங்குலி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூரில் வசித்து வரும் சுதீப்தோ கங்குலியின் தம்பி பலமுறை தனது அண்ணன் மற்றும் அண்ணிக்கு போன் செய்தும் எடுக்காமல் இருந்து வந்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த சுதீப்தோவின் தம்பி தனது நண்பருக்கு போன் செய்து அண்ணன் வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அவரும் அங்கு சென்று பார்த்த போது சுதீப்தோவின் வீடானது பூட்டி கிடந்துள்ளது. அதனையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பிரியங்கா மற்றும் அவரது மகன் முகத்தில் பிளாஸ்டிக் பை மூடிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். 

Pune

அதுமட்டுமின்றி சுதீப்தோ கங்குலி பக்கத்து அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக கிடந்திருந்தார். அதனையடுத்து போலீசார் மூன்று பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.