கணவர் குடிக்க வாங்கி வைத்திருந்த மதுவை குடித்த மனைவி... ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.!

கணவர் குடிக்க வாங்கி வைத்திருந்த மதுவை குடித்த மனைவி... ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.!


Salem husband murder her wife

சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் - சரண்யா தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சரண்யாவின் தம்பிக்கு சரண்யா இறந்து விட்டதாக தகவல் வந்துள்ளது.

தகவலை அடுத்து சரண்யாவின் வீட்டிற்கு சென்ற சரண்யாவின் தாய் தனது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை ஏற்ற போலீசார் தலைமறைவான சரண்யாவின் கணவரை கண்டு பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

Murder

அதில் சரண்யா மற்றும் லட்சுமணன் இருவரும் பள்ளிபடிக்கும் போதே காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்பதும் கூலி வேலை பார்க்கும் இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவத்தன்று சரண்யா தனது கணவர் வாங்கி வைத்திருந்த மதுவை குடித்து குழந்தைகளுக்காக வைத்திருந்த உணவையும் சாப்பிட்டு விட்டு சரியில்லை என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன் சரண்யாவை அடித்து கீழே தள்ளி கழுத்தை நெறித்து கொலை செய்ததை ஒப்பு கொண்டுள்ளார். அதனையடுத்து போலீசார் லட்சுமணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.