புன்னகை அரசியாக மாறிய ரோஜா; சந்திரபாபு நாயுடு கைதை மிட்டாய் வழங்கி கொண்டாடிய அமைச்சர்.!

புன்னகை அரசியாக மாறிய ரோஜா; சந்திரபாபு நாயுடு கைதை மிட்டாய் வழங்கி கொண்டாடிய அமைச்சர்.!



Roja Celebrate CBN Arrest 

 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்திரபாபுவின் கைது நடவடிக்கைக்கு எதிராக, அவரின் தெலுங்கு தேசம் கட்சியினர் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுத்து இருக்கின்றனர். 

இந்நிலையில், சந்திரபாபுவின் கைது நடவடிக்கையை, அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா இனிப்பு வழங்கி சிரித்து கொண்டாடினார். 

ஆந்திராவில் யுவஜன ஸ்ராமிக விவசாயி காங்கிரஸ் கட்சி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பில் இருக்கிறார்.