யு-டர்ன் எடுத்த லாரி ஓட்டுனரால் 6 பேர் உடல்நசுங்கி மரணம்; கோவிலுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்.!



Rajasthan Delhi mumbai Expressway Accident 

 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மாதிப்பூர் மாவட்டம், டெல்லி - மும்பை நெடுஞ்சாலையில், லாரி ஓட்டுநர் ஒருவர் திடீரென யு-டர்ன் எடுத்தார். அப்போது, அவ்வழியே கோவிலுக்கு குடும்பத்தோடு சென்றுகொண்டிருந்தவர்களின் கார், லாரியின் மீது பலமாக மோதியது. 

6 பேர் பரிதாப பலி:

இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தை ஒருவர் அதிஷ்டவசமாக காயத்துடன் உயிர்தப்பினார். 

நெஞ்சை பதறவைக்கும் விபத்து சம்பவத்தின் சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாரி ஓட்டுனரின் அலட்சியத்தால் விபத்து நடந்தது உறுதியாகியுள்ளது.