வெளுத்துவாங்கப்போகும் மழை.. மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்கற்று..! மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை..!!

வெளுத்துவாங்கப்போகும் மழை.. மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்கற்று..! மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை..!!



rain warning by meotrological centre

தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்தித்தொகுப்பில், தமிழகத்தின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரில் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலையானது 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையானது 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

India

கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவில் சிவகங்கை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா 6 சென்டிமீட்டரும், கடலூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், சேலம், நாமக்கலில் தலா 4 சென்டிமீட்டரும், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஈரோட்டில் தலா 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.