மலாய் மட்டனில் எலிக்கறி; ஆசையாக சாப்பிட வந்தவர்களுக்கு அதிர்ச்சி தந்த ஹோட்டல் நிர்வாகம்.!

மலாய் மட்டனில் எலிக்கறி; ஆசையாக சாப்பிட வந்தவர்களுக்கு அதிர்ச்சி தந்த ஹோட்டல் நிர்வாகம்.!



  Punjab Ludhiana Family Order Malai Mutton in Hotel They Serve Curry With Rate  

 

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் குடும்பத்தினர் உணவு சாப்பிட சென்றுள்ளனர். 

அப்போது, அவர்கள் மலாய் மட்டன் ஆர்டர் செய்தனர். உணவகம் சார்பில் பரிமாறப்பட்ட மலாய் மட்டனில் எலிகள் இறந்து கிடந்ததாக தெரிகிறது. 

இதனைக்கண்ட அதிர்ச்சி அடைந்தவர்கள், அதுகுறித்து புகார் தெரிவித்த போது உணவகம் சார்பில் சரிவர பதில் கூறவில்லை. 

பஞ்சாப்

மேலும், ஹோட்டல் நிர்வாகத்திற்கு நற்பெயரை களங்கப்படுத்தும் பொருட்டு, இவ்வாறான செயலில் சிலர் ஈடுபட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடந்து வருகிறது. உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.