பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ 500 வழங்கப்படும்... புதுச்சேரி அரசு அறிவிப்பு!!

பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ 500 வழங்கப்படும்... புதுச்சேரி அரசு அறிவிப்பு!!



Puducherry Pongal gift 500 rupees

வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைக்காரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக அரிசி மற்றும் வெல்லத்துடன் ரூ 500 வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அனைவரது வங்கி கணக்கிலும் இந்த பணத்தை வரவு வைக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அம்மாநில மக்களுக்கு அரிசி மற்றும் வெல்லத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ 500 பொங்கலுக்கு முன்பாகவே கிடைக்க பெற உள்ளது. 

pongal gift

ஏற்கனவே புதுச்சேரி அரசு சிவப்பு அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு வேட்டி புடவைக்காக ரூபாய் 1000 வழங்கப்பட்ட நிலையில் தற்போது வெளியான புதிய அறிவிப்பால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் அறிவிப்பு தமிழ்நாட்டில் வருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.